இந்த ஐ.பி.எல் தொடரில் இந்த அணியை தோக்க அடிக்கிறது ரொம்ப கஷ்டம் – கோலி வெளிப்படை

Kohli-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 19 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 26 பந்துகளில் 53 ரன்களையும், ப்ரித்வி ஷா 42 ரன்களையும், பண்ட் 37 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் கோலி 43 ரன்களை அடித்தார். அவரை தவிர மற்ற யாரும் 20 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆட்டநாயகனாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் தேர்வானார்.

Stonis

இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்களது பேட்டிங் ஆர்டர் பயமற்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மேலும் உள்நாட்டு வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள், பேட்டிங், பவுலிங் என அனைத்தும் சம நிலையில் உள்ளதால் அவர்கள் வீழ்த்த கடினமான அணி என்று நினைக்கிறேன்.

dc

அவர்களைத் தோற்கடிக்க முடியாது என்று கூறவில்லை. இருப்பினும் அவர்களை வீழ்த்துவது என்பது ஒரு கடினமான விடயம். ஏனெனில் அவர்களுடைய அணி வீரர்கள் மற்றும் அவர்களுடைய நோக்கம் அனைத்தும் சரியாக உள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி செயல்பட்ட விதம் சரி அல்ல. இருப்பினும் டெல்லி அணி வெற்றி பெற அனைத்து விதத்திலும் தகுதியான அணி என்று தான் கருதுவதாக கோலி கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement