- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஏழு இரட்டை சதத்தில் பெஸ்ட் அப்படின்னு சொல்லனும்னா அது இந்தஇரட்டைச்சதம் தான் – கோலி ஓபன் டாக்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாம் நாளான நேற்று போட்டி முடிவைடைந்ததும் கோலி அளித்த பேட்டியில் அவர் அடித்த இந்த ஏழு இரட்டைச் சதத்தில் தனக்கு பிடித்த இரட்டை சதம் பற்றி பகிர்ந்துள்ளார். அது குறித்து கோலி குறிப்பிட்டதாவது : இரட்டை சதம் அடிப்பது என்பது எப்போதும் சிறப்பான ஒன்றாகும்.

- Advertisement -

இந்த போட்டியிலும் நான் இரட்டைச்சதம் விளாசியது மகிழ்ச்சிதான் மேலும் இந்த விஷயத்தில் எனக்கு பிடித்தமான நெருக்கமான ஒரு இரட்டை சதம் எது என்றால் 2017 ஆம் ஆண்டு மும்பை மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 235 ரன்கள் அடித்தது தான் எனக்கு பிடித்த இரட்டைசதமாக நான் நினைக்கிறேன்.

ஏனெனில் அது போன்ற கடினமான சூழலில் இந்திய அணிக்கு எனது ஆட்டத்தின் மூலம் சிறப்பான பங்களிப்பை அளித்ததை மிகப் பெருமையாக நினைக்கிறேன் எனவே அந்த போட்டி தான் மிகச் சிறந்த இரட்டைச்சத போட்டி என்று நான் கூறினேன் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by