ப்ளீஸ் என் மகளை மட்டும் போட்டோ எடுக்காதீங்க – நிருபர்களை கேட்டுக்கொண்ட விராட் கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்திய அணியில் பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அடுத்தடுத்து விராட் கோலியின் பதவி நீக்கம், அவருக்கும் கங்குலிக்கும் இடையேயான மோதல் என பல்வேறு விடயங்கள் அதிகளவு பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி இந்திய அணி திட்டமிட்டபடி தென்னாபிரிக்கா சென்றடைந்தது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரிலும் விராட் கோலி விளையாடுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனது குடும்பத்துடன் அவர் தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார்.

- Advertisement -

இவ்வளவு பரபரப்புக்கிடையே 16-ஆம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டு தென்னாப்பிரிக்கா வந்தடைந்த இந்தியா வீரர்கள் விமான நிலையத்தில் இறங்கி பேருந்து மூலம் ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது பேருந்தில் இருந்து இறங்கி வந்த கோலி தனது மகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என நிருபர்களிடம் அன்பாக கேட்டுக் கொண்டார்.

அதன் பிறகு அனுஷ்கா சர்மாவுடன் அவரது மகள் வாமிகாவும் வந்தார். கோலியின் கோரிக்கையை ஏற்று நிருபர்கள் அவரை புகைப்படம் எடுக்கவில்லை. தனது மகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட விராட் கோலியின் செயல் தற்போது இன்ஸ்டாகிராமில் விடியோவாக வைரலாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : பாக் வீரர்களான இவர்களை போல 2 வீரர்கள் நம்மிடம் இல்லையே என்று இந்தியா சொல்லும் நாள் வரும் – ரஷீத் லத்தீப்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி வரும் 26 ஆம் தேதி துவங்கவுள்ளது. இதுவரை தென்னாபிரிக்க மண்ணில் இந்தியா அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பதனால் இம்முறை டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணி ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement