இவரது இன்னிங்ஸ் தான் இந்த போட்டியில் மாற்றத்தை தந்தது. வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது – கோலி புகழாரம்

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. டாசில் வெற்றி பெற்ற டேவிட் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள படிக்கல் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க விராட்கோலி 33 ரன்களை குவித்தார். அதன்பின்னர் மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க அதிரடி வீரரான மேக்ஸ்வெல் மட்டும் ஒரு பக்கம் தனியாக நின்று 41 பந்துகளில் 3 சிக்ஸர் 5 பவுண்டரி 59 ரன்கள் குவித்து போட்டியின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

maxwell

- Advertisement -

மேக்ஸ்வெல் என்ற தனி ஒருவரின் அதிரடி ஆட்டம் காரணமாக பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி துவக்கத்தில் சஹா விக்கெட்டை ஒரு ரன்னில் இழந்தாலும் வார்னர்(54) மற்றும் மணிஷ் பாண்டே(38)ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 16 ஓவர்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்த சன்ரைசர்ஸ் அணி எளிதாக வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மீதமிருந்த 4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

குறிப்பாக சபாஷ் அகமது வீசிய 17வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை பெங்களூரு அணியின் பக்கம் கொண்டு வந்தார். பின்னர் இறுதி நேரத்தில் ரஷீத் கான் 9 பந்துகளில் 17 ரன்கள் அடித்து ரன் அவுட்டாக பரபரப்பான இந்த போட்டியில் 20வது ஓவரின் கடைசி பந்தில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஷாபாஸ் அகமது 2 ஓவர்கள் வீசிய 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதேபோன்று ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

shahbaz ahmed

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : இந்த போட்டி எங்களுக்கு ஒரு டாப் க்ளாஸ் போட்டியாக அமைந்தது. மேலும் இந்த மைதானத்தில் ஆட்டம் நகர நகர மிக சவாலாகவே இருந்தது. மும்பை கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி போன்றே இந்த போட்டியும் அமைந்தது. எங்கள் அணியில் பௌலிங் ஆப்சன் நிறைய இருந்ததாலும் பல வீரர்கள் பந்து வீசுவார்கள் என்ற காரணமும் மிடில் ஓவரில் ஆட்டத்தை திருப்பியது. நான் முதல் பாதி முடிந்ததும் 149 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் அணியை இக்கட்டில் சிக்க வைக்க முடியும் என்று கூறினேன். மேலும் 150 ரன்கள் வெற்றிக்கு போதுமான இலக்கு என்றும் நம்பினேன்.

maxwell

அந்த வகையில் இந்த போட்டி அவர்களுக்கு கடினமாக அமைந்தது. சேசிங்கின் போது விக்கெட்டுகள் விழுந்தால் பிரஷர் உண்டாகும். அதுவே இந்தப் போட்டியிலும் நடந்தது. பால் பழையதாக மாற மாற பேட்ஸ்மேன்களுக்கு கடினமாகி வருகிறது. எங்களது பேட்டிங் பவர் பிளே இன் போது சில பவுண்டரிகளை அடிக்க முயற்சித்தேன். இந்த போட்டியில் மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அவருடைய ஆட்டம் மிகச்சிறப்பாக அமைந்தது. எங்களுடைய திட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஹர்ஷல் படேல் டெல்லியில் இருந்து எங்கள் அணிக்கு வந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு போட்டியையும் ரசித்து விளையாடி வருகிறோம் என வெற்றி குறித்து கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement