இவர் மட்டும் அடிக்க ஆரம்பிச்சா அவரை யாராலும் நிறுத்தவே முடியாது – புகழ்ந்து தள்ளிய விராட் கோலி

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி விளையாடத் தொடங்கிய பெங்களூரு அணிக்கு 2வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரின் 2-வது பந்தில் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையிலும், பட்டிதார் 1 ரன் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

varun 1

- Advertisement -

இதன் காரணமாக பெங்களூர் அணி 2 ஓவர்கள் முடிவில் 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பின்னர் படிகல்லுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ஒருபக்கம் ரன்களை குவிக்க நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் 25 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 3 சிக்சர்கள் 9 பவுண்டரி என 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதி நேரத்தில் டிவில்லியர்ஸ் 34 பந்துகளை சந்தித்து 3 சிக்சர்கள் 9 பவுண்டரி என 76 ரன்கள் அடித்து அசத்த இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்து அசத்தியது. சென்னை மைதானத்திற்கு 160 ரன்களை வெற்றிக்கு போதுமான நிலையில் இவர்கள் 200 ரன்களை அடித்ததால் போட்டியின் முடிவு அங்கேயே உறுதிசெய்யப்பட்டது.

maxwell

அந்த வகையில் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அன்றே அதிகபட்சமாக ரசல் 31 ரன்களையும், மோர்கன் 29 ரன்களும் குவித்தனர். பெங்களூர் அணி சார்பாக ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்களையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்னர் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இருந்தும் 200 ரன்கள் அடிப்பது என்பது எல்லாம் அசாத்தியமான ஒரு சாதனை. மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தினர். குறிப்பாக மேக்ஸ்வெல் துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பை அதிகப்படுத்தினார். இதுபோன்ற ஒரு வீரரை தான் நாங்கள் அணிக்காக தேடிக்கொண்டிருந்தோம்.

abd

அதுமட்டுமின்றி டிவில்லியர்ஸ் பார்மில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவது என்பது எந்த பவுலராலும் முடியாத காரியம். அந்த வகையில் இறுதி நேரத்தில் டிவில்லியர்ஸ் தனது அதிரடி வெளிப்படுத்தி இந்த மைதானத்தில் 40 ரன்கள் வரை கூடுதலாக எடுக்க வைத்தார் என்று கோலி கூறினார். மேலும் இவர்கள் இருவரது ஆட்டமே இந்த வெற்றிக்கு காரணம் எனவும் டிவில்லியர்ஸ் பந்தை அடிக்க ஆரம்பித்து விட்டால் அவரை நிறுத்த முடியாது என்றும் அவரைப் புகழ்ந்து கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement