இந்த ஆண்டு முழுவதும் இந்திய அணிக்கு சிறப்பாக இருந்தது. ஆனால் 30 நிமிடத்தை தவிர – கோலி குறிப்பிட்ட அந்த 30 நிமிடம் என்ன தெரியுமா ?

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 89 ரன்கள், பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

அதன்பிறகு 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 48.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 39 ரன்களுடனும் தாகூர் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இந்திய அணி வெற்றிபெற வைத்தனர். ஆட்டநாயகனாக கோலியும் தொடர் நாயகனாக ரோஹித்தும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 10 ஆவது முறையாக இந்திய அணி தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை வென்று அசத்தியது. இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி பேசுகையில் : இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது சிறப்பான ஒரு விடயமாகும். மேலும் இந்த வருடம் முழுவதும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான ஒரு வருடமாக அமைந்தது.

Kohli-1

ஆனால் இந்த ஆண்டில் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நாங்கள் தோற்ற கடைசி 30 நிமிடங்களை தவிர இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடினோம் என்று நினைக்கிறேன். நாங்கள் தொடர்ந்து உலகக்கோப்பையை துரத்திக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் அதனை எட்டும் தூரத்தை அடைந்துவிட்டோம் நிச்சயம் கண்டிப்பாக ஜெயிப்போம் என்றும் கோலி குறிப்பிட்டு பேசினார்.

Advertisement