நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று நினைத்து களமிறங்கிய கோலி. சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 84 ரன்களை சேர்த்தார். அதிலும் குறிப்பாக நேற்று செம பார்மில் இருந்த அவர் குல்தீப் வீசிய பந்தை நேராக மிக வலுவுடன் அடித்தார். அந்த பந்தை குல்தீப் கேட்ச் செய்து கோலியை வெளியேற்றினார். இருப்பினும், அந்த பந்த கண்டு பயந்த அமபயர் பந்தை பார்த்து பயந்து எகிறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ :
You shoot, I catch the bullet – Kuldeep to VK https://t.co/AZ3vyBMaLk via @ipl
— Siva.k (@sivakubendiran) April 6, 2019
ஐ.பி. எல் தொடரின் 17 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 84 ரன்களை அடித்தார்.
பிறகு 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ற்றங்களை அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் சார்பாக க்றிஸ் லின் 43 ரன்களும், ரஸ்ஸல் 48 ரன்களும் அடித்தனர். இதன்மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.