IND vs ENG : அணியின் 4 ஆவது வீரராக இவர் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது – விராட் கோலி

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி

Kohli
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி 11 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

Shami

- Advertisement -

அடுத்ததாக இந்திய அணி இன்று 30ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது 2 அணிகளுக்குமே இந்த போட்டியை முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று கருதப்படும் இந்த இரண்டு அணியும் மோதுவதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : விஜய் சங்கர் தனது முதல் போட்டியில் நன்றாக ஆடினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆடுகளம் கடினமாக இருந்தது. கிரிக்கெட்டில் 30 முதல் 60 ரன்கள் அடிக்க வர சில நேரம் அதிர்ஷ்டம் வேண்டும். அப்படி இருந்தால்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

Shankar

விஜய் சங்கர் அந்த இடத்தினை நெருங்கிவிட்டார். இன்னும் சில போட்டிகளில் சிறப்பான இன்னிங்சை அவர்கள் அணிக்கு வெளிப்படுத்துவார் என்று நம்பிக்கை இருக்கிறது. எனவே அவர் தொடர்ந்து இந்திய அணி நான்காவது வீரராக விளையாடுவார். இப்போது உள்ள அணி சிறப்பாகவே உள்ளது என்று விராட் கோலி கூறினார். இதன் மூலம் இன்றைய போட்டியிலும் விஜய் சங்கர் நான்காவதாக விளையாட உள்ளது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement