நீ முடிஞ்சது பாத்துக்கோ. நாங்க செய்யப்போற சம்பவம் சிறப்பா இருக்கும் – நியூசி வீரருக்கு பதிலடி கொடுத்த கோலி

Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று பார்க்கப்படும் ஒரு அணியான இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக படு மோசமான தோல்வியை சந்தித்தது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவரை கூட விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இதன் காரணமாக முதல் போட்டி முடிந்ததும் இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

INDvsPAK

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இன்று துபாயில் நடைபெற இருக்கும் 2-வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக பல்வேறு முன்னாள் வீரர்களும், நிபுணர்களும் இந்த போட்டி குறித்து பல்வேறு விமர்சனங்களை அளித்து வந்தனர்.

மேலும் இந்த போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணி வீரர்கள் சிலர் இந்த போட்டி குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்தவகையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ட்ரென்ட் போல்ட் இந்திய அணியை பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி எவ்வாறு பந்துவீச்சு சுருட்டியிருந்தாரோ அதேபோன்றுதான் பவர்பிளே ஓவர்களிலேயே இந்திய அணியை சுருட்டுவேன் என்று கூறியிருந்தார்.

boult

இந்நிலையில் அவரது இந்த கருத்துக்கு பேட்டி அளித்த பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : ஷாகின் அஃப்ரிடியை பார்த்து நீங்கள் எவ்வாறு உத்வேகம் அடைந்திருக்கிறீர்களோ அதே போன்று நாங்களும் அந்த போட்டிக்கு பின்பு சில விடயங்களை சரி செய்து இருக்கிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ.கோ : ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி அசத்திய இலங்கை வீரர் – இதுல உள்ள ஸ்பெஷல் என்ன தெரியுமா?

இந்த போட்டியில் உங்களை எதிர்கொள்ள நாங்கள் நம்பிக்கையுடன் காத்து உள்ளோம் என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இன்றைய போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என்றும் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement