Virat Kohli : இந்திய கேப்டன் கோலிக்கு அபராதம் விதித்து அதிரடி காட்டிய – ஐ.சி.சி

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும்

Kohli-1
- Advertisement -

நேற்றைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது ஓவரின் 4-வது பந்தை வீசிய முகமது சமி எல்பிடபிள்யூ அப்பீல் கேட்டார். அப்போது அதனை அம்பயர் மறுக்க கோலிக்கும் அம்பயருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு மீண்டும் பும்ரா வீசிய ஓவரில் மறுபடியும் கோலிக்கும் அம்பயருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இப்படி கோலி ஒரே போட்டியில் இரு முறை அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதன் காரணமாக விராட் கோலிக்கு தற்போது போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்து அதிரடி காட்டி உள்ளது ஐ.சி.சி. மேலும் 2016ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சட்ட முறைப்படி கோலி தற்போது 2வது முறையாக தண்டிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

kohli 2

- Advertisement -

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.

bumrah 1

பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.

Advertisement