Virat Kohli : அம்பயரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அடக்கத்தோடு சென்ற கோலி – காரணம் இதுதான்

ஐ.பி.எல் தொடரின் 54 ஆவது போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமை

Kohli-2
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 54 ஆவது போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

williamson

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பெங்களூரு அணி. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 70 ரன்களை குவித்தார்.

இதனால் 176 ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹெட்மயர் 75 ரன்களும், குர்கிரத் சிங் 65 ரன்களையும் குவித்தனர். ஹெட்மயர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Kohli 1

இந்த போட்டியின் இறுதி ஓவரில் வில்லியம்சன் முதல் 4 பந்தில் 20 ரன்களை குவித்தார். அதற்கடுத்து 5 ஆவது பந்தினை உமேஷ் யாதவ் வீச அந்த பந்தினை அம்பயர் நோபால் என்று அறிவித்தார். ஆனால், பந்து நோபால் இல்லை என்று உமேஷ் யாதவ் அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார். இதனை கண்ட விராட் கோலி அம்பயரின் அருகில் வந்தார்.

Kohli

ஆனால், அம்பயர் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. பிறகு கோலி அம்பயரிடம் வாதிடாமல் அமைதியாக சென்றார். ஏனெனில் ஏற்கனவே அம்பயரிடம் வாதிட்டு கோலிக்கு கேட்ட பெயர் கிடைத்தது. மேலும், தோனி ஒருமுறை கேட்ட பெயர் வாங்கினார். இதனால் அம்பயரிடம் ஏதும் கேட்காமல் அமைதியாக சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கண்ட பெங்களூரு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

Advertisement