23ஆம் தேதி வரும் சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் பன்னிரெண்டாவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாட தயாராகி வருகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் தோனி அணியும், பெங்களூரில் கோலி அணியும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சிக்காக பெங்களூர் மைதானம் வந்துள்ள கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் விராத் கோலி குறிப்பிட்டதாவது :
மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாட வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் காத்திருக்கிறேன் களத்தில் விளையாடுவதற்காக என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தைரியமாக விளையாடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Great to be back at the Chinnaswamy for another season with @RCBTweets. ???? Can’t wait to be on the field! ???????? #PlayBold #IPL2019 pic.twitter.com/2Bl7oGY2qE
— Virat Kohli (@imVkohli) March 18, 2019
சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி முதல் போட்டி என்பதாலும் கடைசியாக பெங்களூரு அணி ஆடிய ஆறு போட்டிகளிலும் சென்னை அணியை வென்று உள்ளதாலும, இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இந்த தொடரை துவங்க ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.