இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் கோலி தானாக முன்வந்து ஓய்வுக்காக விலகியுள்ளார்.
Happy Diwali to everyone. May the Festival of Lights light up your lives and bring more love and peace to all ????????❤️ pic.twitter.com/36Gr0aA6ae
— Virat Kohli (@imVkohli) October 27, 2019
கோலி மீண்டும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு தற்போது ஓய்வில் இருக்கும் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் தீபாவளியை கொண்டாடினார். மேலும் தீபாவளி அன்று ஒரு போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விராட்கோலி.
மேலும் அதில் கோலி குறிப்பிட்டதாவது : இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெற வேண்டிக் கொள்கிறேன் என்று மனைவி அனுஷ்கா சர்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் இதனைக்கண்ட ரசிகர்கள் கோலியின் இந்த பதிவை அதிகளவு பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.