ரோஹித் சென்சுரி அடிச்சதும் விராட் கோலியோட சந்தோஷத்தை பாத்தீங்களா ? – வைரலாகும் வீடியோ

Rohith-4
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸ் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாட ஆரம்பித்த இந்திய அணியானது தற்போது மூன்றாம் நாளின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் குவித்து பலமான நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியை விட தற்போது 171 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

pujara

- Advertisement -

நான்காம் நாளான இன்று நிச்சயம் இன்னும் 100 முதல் 150 ரன்கள் வரை குவிக்கும் பட்சத்தில் இந்திய அணி 320 ரன்களை பெறும் என்பதால் இந்திய அணி சற்று மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார்.

அயல்நாட்டு மண்ணில் இதுவரை சதம் விளாச இல்லை என்ற குறையை போக்கி கொண்ட ரோகித் சர்மா 256 பந்துகளில் 127 ரன்கள் குவித்து தனது அசாத்தியமான ஆட்டத்தை வெளிக்காட்டினார். குறிப்பாக மொயின் அலி வீசிய பந்தில் சிக்சர் அடித்து தனது சதத்தை கடந்தார். அதனை தொடர்ந்து ரோகித் சர்மா தனது மகிழ்ச்சியையும் ஓய்வு அறையை நோக்கி வெளிப்படுத்தினார்.

அப்போது ஓய்வறையில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி ரோகித்தின் இந்த செஞ்சுரியை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ரோஹித்தின் மனைவி ரித்திகாவும் பெவிலியனில் இருந்தபடி அவரின் சதத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடினார். தற்போது இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement