RCB vs KXIP : அணிகள் மாறினாலும் எங்கள் நட்பு மாறாது. கெய்லுடன் நட்பை பகிர்ந்த கோலி – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்

Kohli
- Advertisement -

நேற்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணி மோதிய போட்டியில் பெங்களூரு அணி 17 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டி முடிந்தபின் பெங்களூரு கேப்டன் கோலியும், பஞ்சாப் வீரரான கெயிலும் தங்களது நட்பை பரிமாறிக்கொண்டனர். அவர்களின் நட்பின் அடையாளமாக செய்த செயல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாமல் உள்ளது. இதோ அந்த வீடியோ :

கெயிலும், கோலியும் பெங்களூரு அணிக்காக சிலவருடங்கள் சேர்ந்து விளையாடினர். அப்போது அவர்கள் இருவருக்கும் இருந்த நட்பு ஆண்டுகள் மாறினாலும், அணிகள் மாறினாலும் அப்படியே இருப்பது அவர்களின் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விடீயோவினை அவரது ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

Ashwin 1

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களை அடித்தார், ஸ்டோனிஸ் 46 ரன்களை அடித்தார்.

இதனால் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே அடித்தது. பஞ்சாப் அணி சார்பாக பூரான் 28 பந்துகளில் 46 ரன்களும், ராகுல் 42 ரன்களும் குவித்தனர். இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 44 பந்துகளில் 82 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement