உலகக்கோப்பையில் ரோஹித்துடன் ஓப்பனராக ஆடப்போவது இவர்தான். இஷான் கிஷன் இல்ல – விராட் கோலி

Kohli-2 Press
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் போட்டிகளானது துவங்கி நடைபெற்று வருகிறது. இது தொடரின் முதல் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வர இன்னும் சில தினங்களில் முதன்மை போட்டிகளானது நடைபெற உள்ளது. இந்திய அணி ஆனது 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியிலும் இந்திய அணி கலந்துகொண்டு விளையாடுகிறது.

IND

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 189 ரன்களை 19 ஓவர்களில் அட்டகாசமாக துரத்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் 51 ரன்களும், இஷான் கிஷன் 70 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மாவுடன் யார் ? துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்பது குறித்த முக்கிய தகவலை இந்திய அணி கேப்டன் விராட்கோலி நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நிச்சயம் ரோகித் சர்மாவுடன் உலக கோப்பை அணியில் துவக்க வீரராக ராகுல் தான் களமிறங்குவார். அவரை டாப் ஆர்டரில் இருந்து கீழே இறக்குவது என்பது கடினமானது.

ரோகித் சர்மாவும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் எனவே இவர்கள் இருவரும் ஓப்பனர்களாக களமிறங்குவார்கள். நான் அணியின் 3வது வீரராக களம் இறங்குவேன் என்று கோலி கூறினார். மேலும் கோலி இவ்வாறு கூறியதால் நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா ? அல்லது இஷான் கிஷன் விளையாடுவாரா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இஷான் கிஷன் பெருமளவு துவக்க வீரராகவே விளையாடி உள்ளதால் நிச்சயம் சூர்யகுமார் யாதவ் 4-வது வீரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி எங்களுக்கு ஓகே. ஆனா இவர் சி.எஸ்.கே அணியில இருப்பாரான்னு சொல்ல முடியாது – சி.எஸ்.கே ஓனர்

அதேபோன்று மிடில் ஆர்டரில் சூரியகுமார் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பதால் நிச்சயம் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் ஐபிஎல் தொடரின்போது இஷான் கிஷன் தான் ஓபனிங் இறங்குவதாக எலி கூறியதாக கூறியிருந்த நிலையில் தற்போது மீண்டும் விராத் கோலி ராகுல் ஓப்பனராக களமிறங்குவார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement