உறுதியானது கே.எல் ராகுலின் திருமணம். கரம் பிடிக்கப்போகும் மணப்பெண் யார் தெரியுமா? – விவரம் இதோ

KL-Rahul
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் வீரரான கே.எல் ராகுல் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 45 டெஸ்ட் போட்டிகள், 49 ஒருநாள் போட்டிகள் மற்றும் 72 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரிலும் இதுவரை 109 போட்டிகளில் விளையாடி உள்ளது மட்டுமின்றி தற்போது லக்னோ அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். திறமையான இளம் வீரராக இருக்கும் கே.எல் ராகுல் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட வேளையில் சமீபத்தில் ஏற்பட்ட பார்ம் சரிவு காரணமாக அவர் தனது துணை கேப்டன் பதவியை இழந்தார்.

KL-Rahul

- Advertisement -

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல் ராகுல் அடுத்ததாக ஜனவரி 18-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

மேலும் அவர் குடும்ப காரணங்களுக்காக தனிப்பட்ட முறையில் விடுப்பு எடுத்துள்ளதாக இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் உறுதியான தகவல் ஒன்றினை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரை முடித்துக் கொண்ட பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் ஓய்வெடுப்பதற்கு காரணமே அவருடைய திருமணம் தான் என்ற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த திருமணமானது வெகு விமர்சையாக நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Athiya Shetty

பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டி என்பவரை காதலித்து வந்த கே.எல் ராகுல் கடந்த சில ஆண்டுகளாகவே அவருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, ஜோடியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு தங்களது காதலை உறுதி செய்த அவர்கள் இருவரும் ஜனவரி 23-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

மேலும் இந்த திருமணத்தில் முன்னாள் கேப்டன் தோனி, விராட் கோலி மற்றும் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா என பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு அவர்கள் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கே.எல் ராகுல் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் நியூசிலாந்து தொடரிலிருந்து விலக காரணம் இதுதான் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

ஏற்கனவே தனது மகளின் திருமணம் குறித்து பேசியிருந்த சுனில் ஷெட்டி கூறுகையில் : அவர்கள் இருவரும் எப்பொழுது திருமணத்தை செய்ய வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்த வேளையில் தற்போது அவர்கள் இருவரும் காதலர்களாக இருந்து தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement