KL Rahul : முதல் இரு போட்டிகள் போன்று ஆடக்கூடாது என்றே களமிறங்கினேன் – ஆட்டநாயகன் ராகுல்

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும்

Rahul
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

Bhuvi

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை அடித்தது இதனால் பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சன் அணி சார்பில் துவக்க வீரரான டேவிட் வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 70 ரன்களை அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இறுதிக்கட்டத்தில் ஹூடா 3 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க சன் ரைசர்ஸ் ஓரளவு சுமாரான ஸ்கோரை எட்டியது.

Bairstow-1

பிறகு 151 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பஞ்சாப் அணி சார்பாக ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 71 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். மேலும், மாயங்க் அகர்வால் 55 ரன்களை அடித்தார்.

- Advertisement -

rahul

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை பெற்ற ராகுல் கூறியதாவது : முதல் இரு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடினேன். ஆனால், மொஹாலி மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் தூரம் என்பதனால் கடைசி வரை விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அதைப்போன்று மகிழ்ச்சியுடன் விளையாடி கடைசிவரை நின்று வெற்றியை பெற்று தந்தேன். கெயிலுடன் விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சிதான்.

KL-Rahul

மேலும், மாயங்க் அகர்வால் சிறப்பாக ஆடினார். இந்த போட்டி மட்டுமல்ல மும்பை போட்டியிலும் அகர்வால் சிறப்பாக ஆடினார். நேற்றைய போட்டியில் அவர் பவுண்டரிகளை அடிக்க நினைத்து அடிவந்ததால் எனக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தது என்றும் இந்த போட்டியின் வெற்றி மிகுந்த சந்தோசத்தை தந்தது என்று ராகுல் கூறினார்.

Advertisement