உண்மையில் வாயடைத்து நிற்கிறேன். இந்த வெற்றி கிடைக்கும்னு நினைக்கல. இவர்களே அதற்கு காரணம் – ராகுல் நெகிழ்ச்சி

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 43வது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்சை தீர்மானித்தார்.

KXIPvsSRH

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 32 ரன்களும், ராகுல் 27 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி துவக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் பின்னர் இறுதிகட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக வார்னர் 35 ரன்களையும், விஜய்சங்கர் 26 ரன்களையும் குவித்தனர். இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது மட்டுமின்றி பிளே-ஆப் சுற்றுக்கு வாய்ப்பை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

kxip

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : நாங்கள் வெற்றி பெறுவதை தற்போது வழக்கம் ஆக்கியுள்ளோம். முதல் பாதியில் எங்களால் வெற்றிகளை குவிக்க முடியவில்லை என்றாலும் தற்போது சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று வருகிறோம். சொல்லப்போனால் தற்போது வாயடைத்து நின்றேன் அதுவே உண்மை ஏனெனில் என்னிடம் பேச வார்த்தைகள் இல்லை.

- Advertisement -

எங்கள் அணி வீரர்களின் சிறப்பான செயல்பாட்டினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது ஒரு சிறப்பான போட்டி நாங்கள் சிறப்பாக விளையாடி இந்த வெற்றியை பெற்றுள்ளோம். வீரர்கள் மட்டுமின்றி அணி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக இதனை கருதுகிறேன். இந்த இரண்டு மாதங்களாக எங்களை மனதளவில் தயார்படுத்தி வந்த அனைவரும் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளனர்.

pooran

இந்த போட்டியின் துவக்கத்திலேயே எங்களுக்கு இந்த மைதானம் கடுமையாக இருந்தது தெரிய வந்தது. அதனால் 160 ரன்கள் அடித்தால் போதும் என்று நினைத்தோம். ஆனால் எங்களால் அந்த அளவு ரன்களை குவிக்க முடியவில்லை என்றாலும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை பெற்று உள்ளோம் என்று ராகுல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement