டெல்லி அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 38 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஐயர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது.

DCvsKXIP

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷிகர் தவான் 61 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரை தவிர மற்ற யாரும் 15 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி சார்பாக நிக்கலஸ் பூரன் 53 ரன்களையும், மேக்ஸ்வெல் 32 ரன்களை குவித்தனர். இறுதியில் தீபக் ஹூடா மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பஞ்சாப் அணி கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறியதாவது : எங்கள் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் இதயத்துடிப்பு உச்சத்தில் இருக்கிறது. ஆனால் இந்த ஆட்டத்தை 19வது ஓவரில் முடித்து வெற்றி பெற்றது மகிழ்ச்சி. நாங்கள் ஆறு பேட்ஸ்மேன் மற்றும் ஒரு ஆல்ரவுண்டர் விளையாடி வருகிறோம். அது அணிக்கு நல்ல பலனைத் தருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் செட்டில் ஆன வீரர்கள் போட்டியை பினிஷ் செய்கிறார்கள்.

அந்த வகையில் எங்கள் அணியில் முதல் நான்கு வீரர்கள் அடுத்து வரும் போட்டிகளில் பினிஷராக இருப்பார்கள் என்று நம்புகிறேன். மேக்ஸ்வெல் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு ஆதரவாக இருப்பது முக்கியம் அப்போதுதான் அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் அணி வீரர்களின் சிறப்பாக செயல்பாட்டினால் இந்த வெற்றி கிடைத்தது என்று புகழ்ந்து பேசினார்.

Advertisement