ஒரு பர்பெஃக்ட் பவுலர் எப்படி இருக்கனுன்னு இவரை பாத்து கத்துக்கோங்க – புகழ்ந்து தள்ளிய ராகுல்

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 38 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஐயர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது.

DCvsKXIP

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷிகர் தவான் 61 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரை தவிர மற்ற யாரும் 15 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி சார்பாக நிக்கலஸ் பூரன் 53 ரன்களையும், மேக்ஸ்வெல் 32 ரன்களை குவித்தனர். இறுதியில் தீபக் ஹூடா மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பஞ்சாப் அணி கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

shami

இந்தப் போட்டி முடிந்து பவுலர்களின் பங்களிப்பு குறித்து பேசிய ராகுல் கூறுகையில் :ஷமியுடைய பங்களிப்பு எத்தகையது என்பது அனைவருக்கும் தெரியும். இதைத்தான் அவர் பல ஆண்டுகளாக அணிக்கு செய்து வருகிறார். இந்த ஆண்டு ஷமிக்கு அதிகப்படியான தெளிவு கிடைத்துள்ளது. மூத்த பந்துவீச்சாளர் என்ற கூடுதல் பொறுப்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரின் இந்த சிறப்பான செயல் பாட்டால் இளம் வீரர்களை உற்சாகமாக செயல்படுகின்றனர்.

shami 1

இவை அனைத்திற்கும் மிக்க நன்றி நாங்கள் வெற்றி பெற்ற எல்லா போட்டிகளிலுமே அவரது பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது. அவரின் பந்துவீச்சை மிகத் துல்லியமாக இருக்கிறது இனிவரும் போட்டிகளிலும் அவர் அசத்துவார் என்ற நம்பிக்கை என்னிடம் இடம் பெரிய அளவில் உள்ளது என்று ராகுல் கூறினார்.

Advertisement