நான் பொய் சொல்ல விரும்பல. உண்மையாவே எனக்கு அந்த பயம் இருந்தது – வெற்றி குறித்து கே.எல் ராகுல் பேசியது என்ன?

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி இன்றுடன் நடைபெற்று முடிந்த இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணியானது இந்த டெஸ்ட் தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதோடு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை (2-1) என்ற கணக்கில் இழந்த வேளையில் அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

IND-vs-BAN

- Advertisement -

கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி துவங்கிய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தங்களது முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 227 ரன்களை அடித்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 314 ரன்களை குவித்தது.

பின்னர் 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணியானது 231 ரன்களை குவித்தது. இதன்காரணமாக 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஷ்வின் ஆகியோரது உதவியால் 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Ashwin

இந்நிலையில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் கே.எல் ராகுல் பேசுகையில் : இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் மைதானத்தில் இருந்து விளையாடும் நமது வீரர்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் இதுவரை போதுமான அளவு கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நிச்சயம் நமது அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே வெற்றியை பெற்று தரக்கூடியவர்கள் தான்.

- Advertisement -

நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எனக்கு இன்றைய நாள் ஆட்டத்தின் போது ட்ரெஸ்ஸிங் ரூமில் மிகவும் பயமாக இருந்தது. ஏனெனில் இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகவும் சவாலாக இருந்தது. புது பந்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் பந்து சற்று மென்மையானதும் ரன்கள் வரும் என்கிற நம்பிக்கையும் இருந்தது.

இதையும் படிங்க : IND vs BAN : ஆல் ரவுண்டராக அபார வெற்றி பெற வைத்த அஷ்வின் – டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்த புதிய உலக சாதனை

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே பங்களாதேஷ் அணி வீரர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசினார்கள். இருப்பினும் நமது அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியின் வெற்றிக்கு நமது அணியின் பந்துவீச்சும் மிகமுக்கிய காரணம் தான். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே நமது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என கே.எல் ராகுல் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement