நாங்கள் சிறப்பான துவக்கத்தை கொடுத்திருந்தால் இவர் வெற்றியை பெற்று கொடுத்திருப்பார் – ராகுல் வேதனை

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

kxipvssrh

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 97 ரன்களையும், வார்னர் 52 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 37 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் (97 ரன்கள்) குவித்த பேர்ஸ்டோ தேர்வானார்.

pooran 1

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : பவர்பிளே ஓவர்களில் விரைவில் நாங்கள் அதிக அளவில் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். மேலும் அகர்வாலின் ரன்அவுட் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. கடைசி 5 போட்டிகளில் டெத் ஓவர்களில் நாங்கள் பேட்டிங் செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இந்த போட்டியில் பூரான் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரது பேட்டிங்கை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக அமைந்தது.

நாங்கள் சரியான தூக்கத்தை பெற்றிருந்தால் இறுதியில் அவர் போட்டியை வெற்றிகரமாக முடித்து இருப்பார். இந்த போட்டியில் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசினார். அவருக்கு இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் பந்து வீசுவது பிடித்திருக்கிறது. இந்த போட்டியில் எங்களது வீரர்கள் திறம்பட செயல்படாமல் போயிருந்தாலும் இனிவரும் போட்டியில் அனைவரும் கண்டிப்பாக தங்களது கடின உழைப்பை அணிக்கு தருவார்கள். மீண்டும் பஞ்சாப் அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement