அவர்கள் விக்கெட்டை எடுக்கலான என்ன நடக்கும்னு காட்டிட்டாங்க – ராகுல் வெளிப்படை

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 18 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.

cskvskxip

- Advertisement -

அதிகபட்சமாக கேப்டன் ராகுல் அதிகபட்சமாக 63 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 33 ரன்களை குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். கடந்த நான்கு போட்டிகளாக துவக்க ஜோடி சோபிக்காத பட்சத்தில் இம்முறை வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்..

17.4 ஓவரில் 181 ரன்களை அடித்து சிஎஸ்கே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தொடரை இரண்டாவது வெற்றியை பெற்றது. வாட்சன் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 83 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 53 பந்துகளில் 87 ரன்களில் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் சி.எஸ்.கே பெற்ற வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

faf

இந்நிலையில் தோல்வி குறித்து பேட்டியளித்த ராகுல் கூறுகையில் : தொடர்ந்து தோற்று கொண்டிருக்கும் அணியில் இருப்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. நாங்கள் மீண்டும் சிறப்பாக திரும்பி வரவேண்டும். இந்த தோல்வி குறித்து ஆராய ராக்கெட் அறிவியல் தேவை இல்லை. நாங்கள் பேட்டிங் துவங்கியபோது சிறப்பாகவே இருந்தது. அதன் பின்னர் பந்து நின்று வந்ததால் ஸ்பின்னர்கள் எங்களை கட்டுப்படுத்தினர்.

csk

வாட்சன் மற்றும் டு பிளிசிஸ் ஆகியோர் அது விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை இன்று காண்பித்து விட்டார்கள். அவர்கள் இருவரும் கிளாஸ் பிளேயர்ஸ். எங்களது பவுலர்களுக்கு தொல்லை கொடுத்தார்கள். இதுபோன்று போட்டியில் கேப்டன்ஷிப் செய்வது மிகவும் கஷ்டம். பவர் பிளேயில் 10 ரன்கள் வீதம் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். நாங்கள் கடினமாக பயிற்சி செய்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement