சி.எஸ்.கே அணிக்கு எதிரான எங்களது தோல்விக்கு ஒரே ஒரு சிம்பிள் ரீசன் தான் – ராகுல் வெளிப்படை

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Dhoni

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் தீபக் ஹூடா 30 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் என 62 ரன்களையும், கேஎல் ராகுல் 29 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக லுங்கி நெகிடி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 154 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் கெய்க்வாட் 49 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 62 ரன்களையும், டு பிளிசிஸ் 34 பந்துகளில் 48 ரன்களையும், அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வானார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : இந்த தோல்விக்கு ஒரு சிம்பிளான காரணம் தான். நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இது போன்ற மிக முக்கியமான போட்டியில் 180 முதல் 190 வரை ரன்களை குவிக்க நாங்கள் நினைத்தோம். ஆனால் எங்களால் சரியான நேரத்தில் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் எங்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றமாக அமைந்தது முதல்பாதியில் நாங்கள் நினைத்த ரிசல்ட் எங்களுக்கு கிடைக்கவில்லை இருப்பினும் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி உள்ளோம். கடைசி இரண்டு போட்டிகளில் எங்களுக்கு பிளேஆப்பிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் எங்களால் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் எங்கள் அணியை நினைத்து பெருமை அடைகிறேன்.

kxip

நிச்சயம் அடுத்த வருடம் பலமாக திரும்புவோம் இந்த வருட தோல்விகளை மறந்து அடுத்த வருடம் எவ்வாறு திரும்ப வேண்டும் என்பதை மட்டுமே நாங்கள் நினைக்க உள்ளோம். இந்த வருடத்தில் நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் கலைந்து அடுத்த வருஷம் நிச்சயம் பலமாக திரும்புவோம் என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement