முதல் 6 ஓவரிலேயே இப்படி நடந்தா நாங்க எப்படி ஜெயிக்குறது. பெரிய தப்பு செய்ஞ்சிட்டோம் – ராகுல் வருத்தம்

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி சென்னை பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே அடித்தனர்.

sharukh

- Advertisement -

அதிகபட்சமாக ஷாருக்கான் 47 ரன்களையும், ரிச்சர்ட்சன் 15 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக தீபக் சாஹர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக மொயின் அலி 46 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 36 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பலம் வாய்ந்த பஞ்சாப் அணி பெரிய அளவில் ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவர்ப்ளே ஓவர்களிலேயே பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்டர் முற்றிலும் முடிவுக்கு வந்தது தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது.

chahar

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராகுல் கூறுகையில் : இந்தப் போட்டியில் பெற்ற தோல்வி குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஒரு அணி முதல் 7 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தால் மீண்டும் அந்த ரிதத்தை பிடிப்பது மிகவும் கடினம். சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். நாங்கள் மோசமான சில ஷாட்டுகளை விளையாடி விட்டோம். இந்த போட்டியில் சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவர்கள் சரியான இடத்தில் பந்தினை வீசினார்கள். குறிப்பாக தீபக் சஹர் வீசிய பந்து அனைத்தும் சிறப்பாக இருந்தது.

chahar 1

இந்த போட்டியில் 150 முதல் 160 ரன்கள் அடித்தால் மட்டுமே வெற்றிக்கு அது போதுமான இலக்காக இருக்கும். 100 முதல் 110 ரன்கள் எல்லாம் பத்தாது என்று ராகுல் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் இந்த போட்டியில் இருந்து நாங்கள் பல விடயங்களை கற்றுக் கொண்டுள்ளோம் இனி வரும் போட்டிகளில் அதை திருத்திக் கொண்டு சிறப்பாக செயல்படுவோம் எனவும் ராகுல் கூறினார். முதல் போட்டியில் 220 ரன்கள் அடித்து விட்டு இப்போது அதில் பாதி கூட நாங்கள் அடிக்கவில்லை. அதன் மூலம் எங்கள் அணியில் உள்ள தவறுகளை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் அதை விரைவில் சரிப்படுத்துவோம் எனவும் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement