KL Rahul : நான் இவ்வாறு ஆடுவதால் மட்டுமே என்னால் சிறப்பாக ஆடமுடிகிறது – ராகுல் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமை

Rahul kl
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டுபிளிஸ்சிஸ் 96 ரன்களும், ரெய்னா 53 ரன்களும் குவித்தனர். இதனால் பஞ்சாப் அணிக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

அதன்படி தெடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகப்பட்டமாக ராகுல் 36 பந்துகளில் 71 ரன்களையும், பூரான் 36 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகன் விருதினை ராகுல் பெற்றார்.

Ragul

போட்டி முடிந்து ஆட்டநாயகன் ராகுல் கூறியதாவது : கடந்த போட்டியில் இருந்து என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். என்னுடைய ஆட்டம் என்பது எங்கள் அணியில் முக்கியமான ஒன்றாகும். அதனால் நான் கடைசி வரை நின்று ஆடவேண்டும் என்று நினைத்து ஆடுகிறேன். மேலும், எனக்கு அதிரடியாக ஆடவும் வாய்ப்புகள் கிடைக்கிறது. அப்போதெல்லாம் என்னை நிலைநிறுத்தி விளையாடுகிறேன்.

Rahul

என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் அதிகம் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அணிக்கு தேவையான நேரத்தில் இதுபோன்று ஆடுவது அவசியம் அதனால் நான் எத்தனை பந்தில் எத்தனை ரன்கள் அடிக்கிறேன் என்பது பற்றி யோசிப்பதில்லை. எனக்கு ஏதுவான பந்துகளை அடித்து ஆடுவதே எனது சிறப்பான பேட்டிங்க்கு காரணம் என்று ராகுல் கூறினார்.

Advertisement