இன்னும் நாங்கள் என்னதான் செய்வது. தொடர் தோல்வியால் துவண்ட – பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் வருத்தம்

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 13 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும். கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

mivskxip

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். மேலும் இறுதி நேரத்தில் பாண்டியா மற்றும் பொல்லார்ட் ஆகியோர் அதிரடியாக விளையாட அந்த 191 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 44 ரன்களும். மயங்க் அகர்வால் 25 ரன்கள் குவித்தனர் இதன் காரணமாக மும்பை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

pattinson

இந்நிலையில் போட்டி முடிந்து இந்த தோல்வி குறித்து பேட்டியளித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறியதாவது : இந்த தோல்வி உண்மையில் வருத்தம் அளிக்கிறது. நாங்கள் கடைசியாக நடைபெற்ற 4 போட்டிகளில் மூன்று வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். இந்த போட்டியிலும் சில தவறுகளை நாங்கள் செய்தோம். மீண்டும் திரும்பி வருவது இப்போதைக்கு அவசியம்.

இந்த போட்டியில் புது பந்தில் மைதானம் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு கொஞ்சம் ஸ்லோவானது எங்கள் அணியில் இன்னொரு ஆல்ரவுண்டர் நிச்சயம் தேவை. அதேபோன்று பயிற்சியாளரிடம் பேசி மற்றொரு பவுலரையும் அணியில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அகர்வால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். ஆரஞ்சு தொப்பிக்கு அவர் தகுதியானவர். அகர்வாலிடம் இருந்து நான் விரைவில் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றுவேன். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement