கடைசியா விளையாடுன 5 மேட்சும் ஜெயிச்சி நாங்க பட்டைய கிளப்ப இதுவே காரணம் – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 46 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

KXIPvsKKR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் கில் 57 ரன்களையும் கேப்டன் இயான் மோர்கன் 40 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், ஜோர்டான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 150 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 150 குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மந்தீப் சிங் 66 ரன்களையும், கெயில் 51 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Mandeep

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : ஒரு அணியாக சேர்ந்து சிறப்பாக விளையாடி கிடைத்த இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பாசிட்டிவான கிரிக்கெட்டை விளையாட நினைத்து விளையாடி வருகிறோம். இந்த ஐந்து வெற்றிகளுக்கும் காரணம் எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தான். ஒரு தனி வீரரை நான் இந்த வெற்றிகளுக்கு காரணமாக கூறமுடியாது.

Mandeep 1

அனைவரின் ஒட்டுமொத்த உழைப்பை இந்த வெற்றிகளுக்கு காரணம். அணி வீரர்களின் அனைவரின் பங்களிப்பு தற்போது நன்றாக இருக்கிறது. பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என இந்த தொடர் முழுவதுமே நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். அனைத்திலும் சிறப்பாக விளையாடி வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று வெற்றி குறித்து ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement