இனி இந்திய அணியில் கே.எல் ராகுலுக்கு வாய்ப்பே குடுக்க கூடாது – ரசிகர்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு

rahul 2
- Advertisement -

இந்திய அணியின் இளம் முன்னணி அதிரடி துவக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் கடந்த சில ஆண்டுகளாகவே தனது அபாரமான பேட்டிங் திறனை வெளிக்காட்டி வருவதால் தற்போது மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக இடம்பெற்று விளையாடி வருகிறார். குறிப்பாக தற்போது கேப்டனாக இருக்கும் ரோஹித்துக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாகவும் அதிகபட்ச வாய்ப்பு கே.எல் ராகுலுக்கு உள்ளது என்றால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் நம்பிக்கையான வீரராக விளையாடி வருகிறார்.

rahul

- Advertisement -

தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வரும் ராகுல் தற்போது இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை. மேலும் டெஸ்ட் தொடருக்கு அவர் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மேலும் காயம் அதிகரிக்கக் கூடாது என்பதற்காக இந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் வெளியேறியிருந்தார்.

ஆனால் இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமெனில் மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காயம் சரி அடைந்தாலும் அவர் இந்திய அணிக்காக திரும்பாமல் தற்போது எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக பெங்களூரில் முன்கூட்டியே பயிற்சியை துவங்கியுள்ளார்.

rahul

இந்த விவகாரம் வெளியாகி இணையத்தில் வைரலாகிய வேளையில் தற்போது இந்திய அணியின் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் இந்திய நாட்டிற்காக போட்டிகளில் பங்கேற்பது குறித்து யோசிக்காமல் எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடருக்காக தற்போது ராகுல் வலைப் பயிற்சியில் ஈடுபடுவது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்திய அணி தற்போது விளையாடி வரும் இந்த தொடரில் அவர் விளையாடுகிறாரோ இல்லையோ காயம் குணமடைந்து அணியில் இணைந்து இருக்க வேண்டும்.

- Advertisement -

ஆனால் அதனை விடுத்து தற்போது அவர் ஐபிஎல் தொடருக்காக பயிற்சியில் ஈடுபடுவது எல்லாம் ஏற்றுக் கூடிய செயல் இல்லை என்று கருத்துக்களை தெரிவிக்கின்றனர். மேலும் அவருக்கு இனி வரும் தொடர்களில் இந்திய அணியில் இடம் கொடுக்கக் கூடாது என்ற குரலும் வலுத்து வருகின்றன. எப்போது அவர் ஐபிஎல் போட்டிகள் தான் முக்கியம் என்று பெங்களூரிலேயே பயிற்சியில் மேற்கொண்டு வருகிறாரோ அப்போதே அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தங்களது காட்டமான கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 தொடருக்காக அசத்தலான இளம் வெளிநாட்டு பவுலரை வாங்கிய சிஎஸ்கே ! சூப்பர் பிளான்

கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடி வந்த ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அணியை பிளேஆப் சுற்றுக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறிய அவரை லக்னோ அணி 17 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி தற்போது அந்த அணியின் கேப்டனாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement