எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது குடுத்தீங்க. நியாயமா அவருக்கு தான் இது போகனும் – கே.எல் ராகுல் பெருந்தன்மை

KL Rahul
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்திருந்த வேளையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா இத்தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

INDvsRSA

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது கே.எல் ராகுல்(57), ரோகித் சர்மா(43), விராட் கோலி(49), சூரியகுமார் யாதவ்(61) என அனைவரது அசத்தலான பங்களிப்பினாலும் 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை குவித்தது. பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு தென்னாப்பிரிக்கா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது டேவிட் மில்லரின் சதம்(106) மற்றும் குவின்டன் டீ காக்கின்(69) அரை சதம் என அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் மட்டுமே அவர்களால் குவிக்க முடிந்தது. இதன் காரணமாக 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Suryakumar Yadav 1

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் 28 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 57 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை கொடுத்ததால் அதனை பின்தொடர்ந்த இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இதன் காரணமாக ஆட்டநாயகன் விருதும் கே.எல் ராகுலுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற கே.எல் ராகுல் பேசுகையில் : ஒரு துவக்க வீரராக சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் இன்று நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன்.

- Advertisement -

இந்த போட்டியில் என்னுடைய மனநிலை மிகச் சிறப்பாக இருந்தது. முதல் பந்தில் நான் பவுண்டரி அடித்த பிறகு இந்த நிச்சயம் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடப் போகிறேன் என்று முடிவு செய்து கொண்டேன். முதல் இரண்டு ஓவர்கள் முடிந்த பிறகு பந்து கிரிப்பாகி வந்ததால் நானும் ரோகித்தும் இது நல்ல பேட்டிங் பிட்ச் என்பதை புரிந்து கொண்டு 180 முதல் 180 ரன்கள் வரை டார்கெட் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இறுதியில் இன்னும் நிறைய ரன்கள் கிடைத்தது. இந்த ஆட்டநாயகன் விருது எனக்கு கிடைத்தது ஆச்சரியமாக உள்ளது.

இதையும் படிங்க : நாங்க ஜெயிச்சிருந்தாலும் கடைசி 5-6 மேட்ச்சா அந்த தப்பு நடந்துக்கிட்டே தான் இருக்கு – ஒப்புக்கொண்ட ரோஹித்

ஏனெனில் நிச்சயம் இந்த விருது சூரியகுமார் யாதவுக்கு தான் சென்றிருக்க வேண்டும். அவரே இந்த போட்டியின் திருப்புமுனையை அளித்தார். அவர் பேட்டிங் விளையாடிய விதம் தான் இந்த ஆட்டத்தை முற்றிலுமாக திருப்பியது. மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும். அந்த வகையில் அவருக்கே இந்த விருதினை வழங்கியிருக்க வேண்டும் என்று கே.எல்.ராகுல் பெருந்தன்மையுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement