இந்த தொடரின் ஆரம்பத்திலேயே கும்ப்ளே சக்ஸஸ் சீக்ரெட்டை சொல்லிட்டாரு – பயிற்சியாளர் குழுவை பாராட்டிய ராகுல்

kumble
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 46 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Mandeep 1

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் கில் 57 ரன்களையும் கேப்டன் இயான் மோர்கன் 40 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், ஜோர்டான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்னர் 150 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 150 குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மந்தீப் சிங் 66 ரன்களையும், கெயில் 51 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

murugan ashwin

இந்நிலையில் போட்டி முடிந்து பயிற்சியாளர் அணில் கும்ப்ளே குறித்தும் கேப்டன் ராகுல் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பயிற்சியாளராக கும்ப்ளே இருக்கும்போது அணியில் இரண்டு லெக்ஸ் ஸ்பின்னர்கள் விளையாடுவதில் ஆச்சரியம் அடையும் அளவிற்கு விடயம் ஒன்றும் இல்லை. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே கும்ப்ளே என்னிடம் ஒரு விஷயத்தை முன்வைத்து கொண்டே இருந்தார்.

bishnoi

அதாவது தொடரின் இரண்டாவது பாதியில் லெக்ஸ் ஸ்பின்னர்கள் நிச்சயம் சாதிப்பார்கள் அவர்களது பந்துவீச்சு எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை அளிக்கும். எனவே தொடர்ந்து அவர்களுக்கான வாய்ப்பை வழங்கி வந்தோம். அதுமட்டுமின்றி அவர் நினைத்ததுபோல தற்போது அனைத்தும் சரியாக சென்றுகொண்டிருக்கிறது. சப்போர்ட் நன்றாக அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர் என்று ராகுல் பயிற்சியாளர் குழுவை பாராட்டியிருந்தார்.

Advertisement