நாங்கள் தோற்றாலும் இவரின் ஆட்டம் என்னை பிரமிக்க வைத்தது – பஞ்சாப் கேப்டன் ராகுல் வியப்பு

Rahul
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 53 ரன்கள் குவித்தார்.

dc vs kxip

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்கள் அடித்து போட்டி “டை” ஆனது. அதிகபட்சமாக துவக்க வீரர் மயங்க் அகர்வால் 89 ரன்களை குவித்தார். சூப்பர் ஓவர் முடிவின் மூலம் டெல்லி அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இந்த வெற்றி குறித்து சில சர்ச்சையும் இருந்துவருகின்றன. இந்நிலையில் போட்டி முடிந்து இந்த போட்டியின் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் :

kxip

இந்தப் போட்டியில் நாங்கள் சிறப்பாகவே பந்துவீசினோம். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த நாள் மோசமாக அமைந்தது எங்களது இந்த தோல்வி வருத்தம்தான் இருப்பினும் இது முதல் போட்டி இந்த போட்டியில் இருந்து ஏராளமானவற்றை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். மாயங்க் அகர்வாலின் பேட்டிங் ஒரு மாயாஜாலம் போல் இருந்தது. அவர் போட்டியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார்.

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விட்டு இது போன்று ஒரு டி20 போட்டியில் மாறுபட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்துள்ளது. மேலும் டாஸ் வென்று நாங்கள் நினைத்தது இந்த மைதானத்தில் நடந்தது. இருப்பினும் இந்த போட்டியில் தோல்வியே கிடைத்துள்ளது. இதற்காக ஒரு கேப்டனாக நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் இனி வரும் போட்டிகளில் தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement