கேப்டனான முதல் போட்டியிலேயே தனித்துவமான சாதனையை நிகழ்த்திய கே.எல் ராகுல் – என்ன தெரியுமா?

rahul 2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஜோகனஸ்பர்க் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதுகுவலி காரணமாக விளையாட முடியாமல் போனதால் துணை கேப்டன் ராகுல் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பினை ஏற்று விளையாடி வருகிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ராகுல் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார் .

Rahul

- Advertisement -

அதன்படி இன்று தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது ராகுல் மற்றும் அஷ்வின் ஆகியோரது ஆட்டத்தை தவிர மற்ற எந்த வீரரும் பெரிய அளவு ரன்களை குவிக்காததால் 63.1 ஒரு ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் மட்டுமே குவித்து முதல் இன்னிங்க்ஸை முடித்துக்கொண்டது.

ராகுல் அதிகபட்சமாக 50 ரன்களையும், அஷ்வின் 46 ரன்கள் குவித்தனர். அதன் பின்னர் தற்போது தென் ஆப்பிரிக்க அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்டு வரும் கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தனித்துவமான சாதனையை முன்னாள் கேப்டன் முகமத் அசாருதீன் உடன் பகிர்ந்து கொண்டார்.

Rahul

அதன்படி ராகுல் படைத்த சாதனை யாதெனில் : ஒயிட் பால் கிரிக்கெட்டில் ( ஒருநாள், டி20 ) கேப்டன்சி செய்யாமலேயே நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக மாறிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக 1990ஆம் ஆண்டு முகமது அசாருதீன் நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கேப்டன்சி செய்தார். அந்த சாதனையை தற்போது 31 ஆண்டுகள் கழித்து ராகுல் செய்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் இன்னும் ரெடி ஆகல.. ரபாடா மற்றும் அம்பயரிடம் மன்னிப்பு கேட்ட ராகுல் – நடந்தது என்ன?

பொதுவாக ஒரு நாள் போட்டிகளில் கேப்டன்சி சிறப்பாக செய்தால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக வாய்ப்பு கிடைக்கும் ஆனால் ராகுல் நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கேப்டனாகும் வாய்ப்பை பெற்றுள்ளதால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement