முதலில் விராட் கோலி, ரோஹித்தையும் ரஞ்சிக் கோப்பையில் ஆடச்சொல்லுங்க.. 1983 உ.கோ வென்ற முன்னாள் வீரர்

Rohit Sharma and Virat Kohli
- Advertisement -

இந்திய அணியின் 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிசான் ஆகிய 2 வீரர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை இந்திய கிரிக்கெட்டில் கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அதில் இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேரான ரஞ்சிக் கோப்பையில் விளையாடாத வீரர்களுக்கு இது நல்ல பாடமாக இருக்கும் என்று சிலர் வரவேற்கின்றனர். மறுபுறம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாத ஹர்திக் பாண்டியாவை ஒப்பந்தம் செய்துள்ள பிசிசிஐ இந்த 2 வீரர்கள் மீது மட்டும் ஒருதலைபட்சமாக நடவடிக்கை நடந்துள்ளதாக எதிர்ப்புகளும் காணப்படுகின்றன.

- Advertisement -

சமமான விதிமுறை:
இந்நிலையில் இஷான், ஸ்ரேயாஸ் மட்டுமல்லாமல் இந்தியாவுக்காக விளையாடாத நேரங்களில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டுமென்று 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வகையில் விதிமுறை என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“இது சரியான முடிவு. அனைவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும். இப்போது ஐபிஎல் மீது மட்டுமே ஆர்வம் இருக்கிறது. பொழுதுபோக்கிற்கு ஐபிஎல் நன்றாக இருக்கும். ஆனால் உண்மையான கிரிக்கெட் 5 நாட்கள் விளையாடுவதில் தான் உள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது உங்களுடைய ஃபார்மை தக்க வைக்க உதவும். எனவே நீங்கள் ரோகித் சர்மா அல்லது விராட் கோலியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாநில அணிக்காக உள்ளூரில் விளையாட வேண்டும்”

- Advertisement -

“ஏனெனில் மாநிலம் தான் உங்களுக்கு ஒரு வீரராக வாய்ப்பு கொடுத்தது. அங்கிருந்து தான் நீங்கள் நாட்டுக்காக விளையாட வந்தீர்கள். அதனால் ஸ்ரேயாஸ், இஷான் ஆகிய இருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல. அனைவரையும் தண்டிக்க வேண்டும். அனைவரையும் ஒரே கண்ணாடியில் பார்க்க வேண்டும். இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையான டி20 லீக் நடைபெறுகிறது. ஆனால் இந்த வீரர்கள் அனைவரும் உள்ளூரில் போதுமான அளவு விளையாடிய முடித்து விட்டார்களா? என்பதே என்னுடைய கேள்வியாகும்”

இதையும் படிங்க: அவங்க இப்படி செஞ்சது எனக்கே ஆச்சர்ய்ம.. ஸ்ரேயாஸ், இஷான் நீக்கப்பட்டது பற்றி சௌரவ் கங்குலி கருத்து

“எங்களுடைய கேரியரை துவங்கும் போது பிஷன் சிங் பேடி, மதன் லால், சுரீந்தர் அமர்நாத், மொஹிந்தர் அமர்நாத், சேட்டன் சவுகான், சந்தீப் பாட்டில், கசன் கர்வி நான் மற்றும் ரவி சாஸ்திரி போன்ற இளம் வீரர்கள் இருந்தோம். அப்போதெல்லாம் நாங்கள் எங்களுடைய மாநில அணிக்காக மிகவும் பெருமையுடன் உள்ளூரில் விளையாடுவோம். அந்த பெருமையான உணர்வை தற்போதைய இளம் வீரர்களிடம் பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement