புதிய கேப்டன் நியமித்த கிங்ஸ் XI பஞ்சாப்.

punjab
- Advertisement -

ஐபிஎல் திருவிழா வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது. கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது.அதில் சில இளம் வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு விலைக்கு வாங்கிய அணி உரிமையாளர்கள், சில மூத்த வீரர்களை ஏலத்தில் சீண்டவே இல்லை.

Ravichandran

- Advertisement -

பஞ்சாப் அணியினை பொறுத்தவரையில் அக்சர் படேலை மட்டும் தக்கவைத்திருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அஸ்வின், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மோகித் சர்மா, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங் ஆகிய முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இதில் அஷ்வின் 7.6 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.

இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்தது. நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில், அந்த அணியின் ஆலோசகர் சேவாக் பேஸ்புக் லைவ் சாட்டில் கலந்து கொண்டு, கேப்டன் யார் என்பதை இன்று தெரிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று சேவாக், பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்படுவார் என்று அறிவித்தார்.

Advertisement