இந்தாண்டு ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் அணி இதுதான். இதில் மாற்றமே இல்லை – கெவின் பீட்டர்சன் அதிரடி

Pieterson-1
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வரும் சனிக்கிழமை துவங்க உள்ள இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரும் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசுவார்கள் ? எந்த பேட்ஸ்மேன்களை அதிக ரன்களை குவிப்பார் ?எந்த அணி வெற்றி பெறும் ? போன்ற பல்வேறு கருத்துக்களை அவர்கள் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் பணியாற்ற உள்ள முன்னாள் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், ஐபிஎல் வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன் இந்தத் தொடரை கைப்பற்ற போகும் அணி குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் வர்ணனையாளராக பணியாற்றி வரும் பீட்டர்சன் இங்கிலாந்தில் இருந்து துபாய்க்கு நேற்று முன்தினம் தனது பயணத்தை துவங்கியதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து புறப்பட்டுள்ளார்.

மேலும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தொடரில் டெல்லி அணி கோப்பையை வெல்லும் என நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் பணியாற்ற இருப்பது உற்சாகம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dc

2012 ஆம் ஆண்டு முதல் 14 ஆம் ஆண்டு வரை டெல்லி அணிக்காக விளையாடி உள்ளார் பீட்டர்சன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ள டெல்லி அணி ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழும், ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் கீழும் சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. வரும் 20ஆம் தேதி தனது முதல் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement