2 ரெண்டு பேர் இல்லனா இங்கிலாந்து ஒன்னுமே இல்ல. சொந்த அணியையே கிண்டல் செய்த – கெவின் பீட்டர்சன்

Pietersen
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைய தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

indvseng

- Advertisement -

முதல் போட்டியில் எளிதாக வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை தவற விட்ட இந்திய அணியானது தற்போது இரண்டாவது போட்டியில் வெற்றி பெற தங்களது முனைப்பினை காட்டி வருகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கடந்தார்.

அதே போன்று தற்போது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியிலும் சதமடித்தது மட்டுமின்றி 180 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோன்று ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்டில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதுமட்டுமின்றி லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

root 2

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பலம் குறித்து பேசிய அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஜோ ரூட் தவிர மற்ற எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடுவதில்லை. அதேபோன்று பவுலிங்கில் ஆண்டர்சன் தவிர வேறு யாரும் சிறப்பாக பந்து வீசுவது இல்லை இவர்கள் இருவரும்தான் இந்திய தொடருக்கான இங்கிலாந்து அணி என கெவின் பீட்டர்சன் கிண்டல் செய்துள்ளார்.

anderson 2

அவர் கூறியதுபோலவே தற்போது இந்திய அணிக்கு எதிராக ரூட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் இரு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசிய பீட்டர்சன் இவர்கள் இருவரை மட்டும் நம்பாமல் வேறு யாராவது சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவது அவசியம் என்றும் தனது கருத்தினை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement