உங்களிடம் அஷ்வின், ஜடேஜா இருப்பதுபோன்று எங்களிடம் ஒருவர் இருக்கிறார். அவர் இந்தியாவை வீழ்த்துவார் – டுபிளிஸ்சிஸ் நம்பிக்கை

Faf
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று துவங்கவுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளிஸ்சிஸ் இந்த போட்டிக்கு முன் நேற்று பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :நாங்கள் வேகப்பந்து வீச்சை முதுகெலும்பாக கொண்ட அணியாக திகழ்கிறோம்.

IND vs RSA

- Advertisement -

இருப்பினும் இந்தியாவில் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருக்கும் அப்படி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் அச்சுறுத்த எங்கள் அணியில் ஒரு வீரர் பந்துவீச இருக்கிறார்.

அப்படி எங்களுடைய சுழற்பந்து வீச்சாளரான மகாராஜ் உலக அளவில் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்திய அணிக்கு ஜடேஜா அஷ்வின் சுழலில் எப்படி அசத்துவார்களோ அதனைப் போன்றே இவரும் இந்திய அணிக்கு எதிர்த்து சுழற்பந்து வீச்சில் அசத்துவார் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.

Maharaj

மேலும் எங்களது பலமே வேகப்பந்து வீச்சு என்பதால் வேகத்திலும் நாங்கள் அசத்த தயாராக உள்ளோம். இருப்பினும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எங்களது முக்கிய வீரராக நாங்கள் மஹாராஜை பார்க்கிறோம். அவர் நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக கடும் சவாலை கொடுத்து விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி ஒரு அச்சுறுத்தலாக இருப்பார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement