அப்போவே சொன்னோம். இவரை சேக்காதீங்கன்னு மொத்தமா முடிச்சிட்டாரு – சி.எஸ்.கே வீரரை கழுவி ஊற்றிய ரசிகர்கள்

KKR
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கணேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் திரிப்பாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். சென்னை அணி சார்பாக பிராவோ 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் 12 வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் வாட்சன் 50 ரன்களும் அம்பத்தி ராயுடு 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதுவரை சென்னை அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல தோனி, சாம்கரன், கேதார் ஜாதவ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்ப இறுதியில் ஜடேஜா 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் திரிப்பாதி தேர்வானார்.

Tripathi

இந்தப் போட்டியிலும் வழக்கம்போல சென்னை அணி வெற்றிப் பாதைக்கு சென்று கொண்டிருக்கையில் ஜாதவ் தனது பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதாவது 12 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 7 ரன்கள் மட்டுமே குவித்தார். சி.எஸ்.கே அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அவரது பேட்டிங்கே கூறப்படுகிறது. ஏனெனில் வெற்றிக்கு செல்லும் முக்கியமான நேரத்தில் இவ்வாறு டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய அவரது பேட்டிங் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒரு வீரரை சேர்க்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில் நேற்றைய போட்டியிலும் அவர் சொதப்பியது. மீண்டும் மீண்டும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல ரசிகர்கள் கேதர் ஜாதவ்வை வறுத்தெடுத்து வருகின்றனர்.

jadhav

மேலும் அடுத்த போட்டியில் அவரை கட்டாயம் அணியில் வைத்திருக்க கூடாது என்றும் அவர் இனியும் சி.எஸ்.கே அணிக்கு தேவையில்லை என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துகளை பகிரங்கமாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement