தோனியின் அரவணைப்பில் இருந்த வீரரையும் வெளியேற்றிய சி.எஸ்.கே நிர்வாகம் – விவரம் இதோ

CSKShop
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.

jadhav

- Advertisement -

இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் மற்றும் வீரர்கள் மாற்றம் ஆகியவை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியிலிருந்து வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் சென்னை அணியிலும் சில முக்கிய வீரர்கள் நீக்கம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பையை வென்ற அணியும், இந்திய ரசிகர்களின் பெரிய ஆதரவையும் வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட இருப்பதாக ஏற்கனவே சில வீரர்களின் பெயர்கள் வெளியானது.

Jadhav

இந்நிலையில் தற்போது தோனியின் நெருங்கிய நண்பரான கேதார் ஜாதவ் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்போவதாக தெரிகிறது. ஏனெனில் 7.8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவர் கடந்த சீசனில் பெரியதாக ஜொலிக்கவில்லை. மேலும் இந்திய அணியிலும் இருந்தும் அவர் கழட்டிவிடப்பட்டார். எனவே அவரை சி.எஸ்.கே அணியால் கழட்டிவிடப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

Advertisement