தோத்தது கூட பரவாயில்ல. ஆனா ஜாதவ் போட்டாரு பாருங்க ஒரு ஸ்கெட்ச் – போட்டியின் போது இதை கவனிசீங்களா ?

Jadhav-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கணேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் திரிப்பாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். சென்னை அணி சார்பாக பிராவோ 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் 12 வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் வாட்சன் 50 ரன்களும் அம்பத்தி ராயுடு 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதுவரை சென்னை அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல தோனி, சாம்கரன், கேதார் ஜாதவ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்ப இறுதியில் ஜடேஜா 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் திரிப்பாதி தேர்வானார்.

Tripathi

இந்த போட்டியின் இறுதி நேரத்தில் கூட வெற்றி சி.எஸ்.கே அணியின் கைகளிலேயே இருந்தது. ஆனால் தோனி ஆட்டமிழந்து வெளியேறியதும் கேதார் ஜாதவ் களமிறங்கியதும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் 12 பந்துகளை சந்தித்த நிலையில் 7 ரன்களை மட்டுமே அடித்து மீண்டும் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் தோற்றது கூட பரவாயில்லை. ஆனால் பேட்டிங் இறங்கும் போது ஜாதவ் பீல்டர்கள் எங்கு நிற்கிறார்கள் ? என்பதை பார்த்து விரல் விட்டு எண்ணினார். மேலும் ஒருபடி மேலே போய் ஆப் சைட் பவுண்டரி லைனில் யாராவது நிற்கிறார்களா ? என்பது போல பார்த்தார். இதனால் அவர் அடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

jadhav

ஆனால் அதற்கடுத்தடுத்த பந்துகளை டொக் வைத்தார். இதனை கண்ட ரசிகர்கள் தோற்றது கூட பரவாயில்லை பீல்டர்களை எண்ணிவிட்டு வந்து டொக் வைத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அது குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement