இவரை எதுக்கு சேர்த்தாங்கனு தெரியல. கோலி எடுத்த முடிவு தவறு. என்ன நடக்கபோகுதோ ? – விவரம் இதோ

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

kohli2

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து செய்தது அதன்படி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் துவக்க வீரர்களாக அறிமுக ஜோடி ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விளையாடியது. அகர்வால் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நிலையிலும், ப்ரித்வி ஷா 21 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கோலி அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் இந்த போட்டியில் கோலியின் முடிவு ஒன்று தவறான விடயம் என்று ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த தவறு யாதெனில் கடந்த 5ஆவது டி20 போட்டியில் மனிஷ் பாண்டே பின்வரிசையில் இறங்கி சிறப்பாக அரைசதம் அடித்து ரன் குவிப்பு உதவினார்.

Kedar-Jadhav

அப்படி ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்த அவரை விடுத்து கடைசியாக எப்போது அரை சதம் அடித்தார் என்று தெரியாத அளவில் இருக்கும் கேதர் ஜாதவ்க்கு அணியில் ஏன் கோலி வாய்ப்பு கொடுத்தார் ? எதற்கு சேர்த்தார் ? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அவரது இந்த முடிவு சற்று அதிர்ச்சியாக உள்ளது என்று ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement