2 ஹாட்ரிக் எடுத்தும் விராட் சான்ஸ் கொடுக்கல, அவர்தான் காப்பாத்திருக்காரு – குல்தீப் கழற்றிவிடப்பட்ட பின்னணி

Kuldeep
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நிறைய இளம் வீரர்கள் தங்களது அபார திறமையால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இந்தியாவுக்காக விளையாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளம் வீரர் குல்தீப் யாதவ் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மீண்டும் தனது மாயாஜால சுழல் பந்துவீச்சை கையிலெடுத்து இந்திய அணிக்குள் நுழைவதற்கான அஸ்திரத்தை தொடுத்துள்ளார். இந்த வருடம் டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை 8.23 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து ஊதா தொப்பிக்காக போட்டி போட்டு வருகிறார்.

kuldeep 1

டெல்லி ஸ்டார்:
அதிலும் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சாதனை படைத்து வருகிறார். இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட ஐபிஎல் தொடரில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இதில் ஆச்சர்யப்படும் அம்சம் என்னவெனில் அவர் விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் பதிவு செய்த 4 வெற்றிகளிலும் அவர் மட்டுமே ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இப்படி அடுத்தடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் முரட்டுத்தனமான பார்முக்கு திரும்பியுள்ளதால் இந்திய அணியில் மீண்டும் கால்தடம் பதிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2017இல் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட அவர் இந்தியாவிற்காக முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்று 2017 – 2018 போன்ற காலகட்டங்களில் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்தார்.

Kuldeep-1

ஆனால் இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக்கோப்பைக்குப் பின் அவரின் பந்துவீச்சில் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக தடுமாறி வந்த அவர் மீண்டும் இப்படி சிறப்பாக செயல்படுவதற்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தான் காரணம் என்று அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

துணையாக ரோஹித்:
அதேசமயம் 2019இல் ஒருசில போட்டிகளில் தடுமாறி நின்ற வேளையில் அவருக்கு அப்போதைய கேப்டனாக இருந்த விராட் கோலி ஆதரவு கொடுக்காததே அவரின் பந்துவீச்சில் மேலும் சரிவு ஏற்படுவதற்கு காரணம் என்றும் கபில் பாண்டே கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டன் நம்பிய போதெல்லாம் குல்தீப் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனாலும்கூட அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது”

Kuldeep Yadhav Kapil Paney

“நல்ல வேளையாக குல்தீப் யாதவின் கேரியரை ரோகித் சர்மா காப்பாற்றியுள்ளார். ரோஹித் தான் குல்தீப் யாதவின் இந்த எழுச்சிக்கு காரணமாவார். அவர் மிகப்பெரிய வீரர்களிடன் திறமையை எவ்வாறு வெளிக்கொணர்வது என்று தெரிந்து வைத்த மகத்தான கேப்டன். குறிப்பாக ஐபிஎல் தொடருக்கு முன்பாக குல்தீப் யாதவை அழைத்து வாய்ப்புக் கொடுத்தார். அந்த வகையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் அவரும் 2 விக்கெட்டுகளை எடுத்து நம்பிக்கையை காப்பாற்றினார்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

விராட் கண்டுக்கல:
2021இல் காயமடைந்த குல்தீப் குணமடைவதற்காக பெங்களூருவில் பயிற்சிகளை மேற்கொண்டபோது அதில் ரோகித் சர்மா திருப்தி அடைந்ததால் வாய்ப்பு கொடுத்துள்ளதாக கபில் பாண்டே கூறியுள்ளார். மேலும் கடினமான தருணங்களில் அவரை நம்பாமல் முன்னாள் கேப்டன் விராட் கோலி அக்ஷர் பட்டேல், அஸ்வின் போன்ற வீரர்களை தேர்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

kuldeep

இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “குல்தீப் யாதவ் கம் பேக் கொடுத்ததற்கான முழு பாராட்டுகளும் ரோகித் சர்மாவை சேரும். ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் இன்று அவர் இங்கே இருக்க முடியாது. ஒவ்வொரு கேப்டனும் வீரர்களை தேர்வு செய்வதில் வித்தியாசமான ஸ்டைலை கொண்டிருப்பார்கள். அந்த வகையில் விராட் கோலி தலைமையில் குல்தீப் நிறைய விளையாடியுள்ளார் என்றாலும் அவர் எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை தேர்வு செய்ய விரும்பினார்.

இதையும் படிங்க : உழைத்தால் சச்சினாகலாம். இல்லைனா அவரைப்போல் வீணாகிடுவீங்க – இளம் வீரர்களுக்கு கபில் தேவ் அட்வைஸ்

அவர் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்தார். குறிப்பாக கணிசமாக பேட்டிங் செய்வார் என்பதற்காக குல்தீப்புக்கு பதில் அக்சர் படேலை அவர் தேர்வு செய்தார். ஆனால் ஒரு கேப்டன் என்பவர் எப்போதும் தனது வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Advertisement