டிரைவர் இல்லாம நானும் உங்க வயசுல இதே மாதிரி விபத்தை சந்திச்சேன் – ரிஷப் பண்ட்டுக்கு கபில் தேவ் அன்பான அட்வைஸ்

- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று கார் விபத்துக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைகளை பெற்று வருகிறார். கடைசியாக கடந்த மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய அவர் அடுத்ததாக நடைபெறும் இலங்கையை தொடரில் இடம் பெறவில்லை. அந்த நிலையில் டேராடூனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் புத்தாண்டுக்காக அதிகாலை 5.30 மணிக்கு தனது பிஎம்டபிள்யூ காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பொதுவாகவே களத்திலேயே அதிரடியாக ரன்களை குவிக்கும் தன்மை கொண்ட அவர் சற்று வேகமாக காரை இயக்கியதுடன் ஏதோ ஒரு தருணத்தில் தூக்க கலக்கத்தை சந்தித்துள்ளார்.

Pushkar 1

- Advertisement -

அதனால் கட்டுப்பாட்டை இழந்த அவருடைய கார் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி விபத்திற்கு உள்ளானது. அந்த மோசமான தருணத்தில் சாதுரியமாக செயல்பட்டு ஜன்னல்களை உடைத்துக் கொண்டு வெளியே வந்த அவரை அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் மீட்டெடுத்து பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவர் வெளியே வந்த அடுத்த சில நிமிடங்களில் அவருடைய கார் நெருப்பில் பற்றி எரிந்தது. அந்த வகையில் துரதிஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

கபில் தேவ் அட்வைஸ்:
அனைவரது பிரார்த்தனைக்கேற்ப எலும்பு முறிவுகளை சந்திக்காமல் ஆபத்து கட்டத்தை தாண்டிய ரிசப் பண்ட் தொடர்ந்து டேராடூனில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் அதிகப்படியான மேற்புற காயங்களை சந்தித்துள்ள அவர் முழுமையாக குணமடைந்து வருவதற்கு குறைந்தது 6 மாதங்கள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அதனால் வரும் பிப்ரவரியில் நடைபெறும் முக்கியமான பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் பங்கேற்க முடியாத நிலைமையை சந்தித்துள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் 2023 உலகக்கோப்பையிலும் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

Pant

இந்நிலையில் இந்த வயதில் காரில் வேகமாக செல்ல வேண்டுமென்று தோன்றுவது இயற்கை தான் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் கபில் தேவ் அவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கிய ரிசப் பண்ட் ஒரு ஓட்டுனரையும் நியமித்திருக்க வேண்டும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் சிலர் ஓட்டுநரை நம்பாமல் தாமே இயக்குவது போல் ரிசப் பண்ட் செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கபில் தேவ் அவருடைய வயதில் தாமும் இதே போல செயல்பட்டு ஒரு இருசக்கர வாகன விபத்தில் சிக்கியதாக பழைய நினைவையும் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களிடம் பார்ப்பதற்கு சிறப்பாகவும் வேகத்தில் அதிரடியாகவும் செல்லும் கார் உள்ளது. ஆனால் அதில் நீங்கள் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும். என்னை கேட்டால் நீங்கள் ஒரு டிரைவரை எளிதாக வாங்கியிருக்கலாம். அதனால் நீங்கள் தனியாக ஓட்டியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. மேலும் ஒருவருக்கு கார் ஓட்டுவது ஒரு பொழுதுபோக்கு அல்லது ஆர்வம் கொண்ட எண்ணமாக இருக்கும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். குறிப்பாக அவருடைய வயதில் அது இருப்பது இயற்கையானது”

Kapil-Dev

“ஆனால் உங்களுக்கும் பொறுப்புகள் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் உங்களை உங்களால் மட்டுமே கவனித்துக் கொள்ள முடியும். அதற்கு தேவையான விஷயங்களை நீங்க தான் தீர்மானிக்க வேண்டும். இதுவும் அவருக்கு ஒரு பாடமாகும். சொல்லப்போனால் நானும் இளம் வயதில் கிரிக்கெட் வீரராக வருவதற்கு முன்பு இதே போல மோட்டார் சைக்கிள் விபத்தை சந்தித்துள்ளேன். அப்போதிலிருந்து என்னுடைய சகோதரர் என்னை மோட்டார் பைக்கை தொட விடமாட்டார். எனவே ரிசப் பண்ட் காப்பாற்றப்பட்டதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்கIND vs SL : முதல் டி20 நடைபெறும் வான்கடே மைதானம் எப்படி? வரலாற்று புள்ளி விவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

அதாவது ஒரு டிரைவரை நியமித்திருந்தால் இரவு நேரத்தில் தூக்க கலக்கத்தை சந்திக்கும் நிலைமை வந்திருக்காது என்று தெரிவிக்கும் கபில் தேவ் இந்தியாவுக்காக விளையாடும் பொறுப்பைக் கொண்டுள்ள நீங்கள் உங்கள் மீது எப்போதும் அக்கறை காட்டுமாறு ரிஷப் பண்ட்டுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் எனவும் கபில் தேவ் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement