நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை ..! தோனி ஜெய்த்துவிட்டார் ..! – வில்லியம்சன் புலம்பல்..! – காரணம் இதோ..?

kane
- Advertisement -

கடந்த ஞாற்றுகிழமை நடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணியுடன் தோல்வியடைந்து கோப்பையை தவறிவிட்டது. இதன் மூலம் 3 வது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது சென்னை அணி. சென்னை அணியின் இந்த வெற்றியை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
karn-sharma

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதி போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. பரபரப்பான இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி வாட்சனின் அதிரடி சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

- Advertisement -

“நாங்கள் இந்த இலக்கு கடினமாக இருக்கும் என்று தான் எண்ணினோம். போட்டியின் பெரும்பான்மையான பகுதி நன்றாக தான் இருந்தது. ஆனால் வாட்சன் 100 ரன்களை குவித்து சிறப்பாக விளையாடினார். நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்தோம். ஆனால் இன்று அப்படி நடக்கவில்லை, சென்னை அணி இந்த வெற்றிக்கு தகுதி உடையது. இந்த தொடரில் தோல்வியடைந்து வெட்கப்படவில்லை அதற்கு மாறாக நிறைய நேர்மறை எண்ணங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது.” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய வில்லியம்சன் பேசுகையில் “இது ஆட்டத்தின் இயற்கை, சில சமயங்களில் எதிரணியின் வெற்றியை நான் வரவேற்க வேண்டும். நெருக்கமான தருணங்களில் சென்னை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் வெற்றி பெற்றது. அவர்கள் எஙகளுக்கு வாய்ப்பே அளிக்கவில்லை. அவர்களது அனுபவத்தை காட்டி வெற்றி பெற்றது இதற்காக அந்த அணியை பாராட்டியே ஆக வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement