சச்சினை பாத்திருக்கேன்.. ஆனா இந்தியாவில் இவர மாதிரி வேற யாருக்கும் ரசிகர்கள் இல்ல.. ஜஸ்டின் லாங்கர்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. அதில் சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் கோப்பையை வெல்வதற்காக விளையாட உள்ளன. இருப்பினும் இந்த தொடரில் இந்திய ஜாம்பவான் வீரர்களான எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடும் சென்னை, பெங்களூரு, மும்பை அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்த 3 வீரர்களில் 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மாவை கேப்டனாக கழற்றி விட்ட மும்பை நிர்வாகத்திற்கு அந்த அணி ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தளவுக்கு மும்பை ரசிகர்கள் ரோகித் சர்மா மீது அன்பையும் ஆதரவையும் வைத்துள்ளனர். அதே போல கோப்பையை வெல்லாவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் முழுமூச்சுடன் பெங்களூரு அணிக்காக போராடும் விராட் கோலி மீது ஆர்சிபி ரசிகர்கள் வெறித்தனமான அன்பை வைத்திருக்கின்றனர்.

- Advertisement -

லாங்கர் வியப்பு:
ஆனால் அவர்களை மிஞ்சும் அளவுக்கு இந்தியாவுக்காக 3 உலகக் கோப்பைகளை வென்று 5 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள எம்எஸ் தோனி மீது சிஎஸ்கே ரசிகர்கள் கண்மூடித்தனமான அன்பை வைத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம். குறிப்பாக தோனி பேட்டிங் செய்வதை பார்ப்பதற்காக தங்கள் பேட்ஸ்மேன் அவுட்டாக வேண்டும் என விரும்பும் அளவுக்கு அவர் மீது சென்னை ரசிகர்கள் அன்பை வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை விட தோனியை இந்திய ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடுவது வியப்பை கொடுப்பதாக லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது அற்புதமானது. முதலில் அதை நான் கேட்டுள்ளேன். பின்னர் சிஎஸ்கே அணிக்கு எதிராக நாங்கள் 2 போட்டிகளில் விளையாடினோம். குறிப்பாக லக்னோவுக்கு அவர்கள் விளையாட வந்தனர்”

- Advertisement -

“லக்னோ மைதானத்தில் சுமார் 50000 பேர் அமர முடியும். ஆனால் உண்மையாக அன்றைய நாளில் 48,000 ரசிகர்கள் எம்எஸ் தோனியின் 7வது நம்பர் ஜெர்ஸியுடன் லக்னோவில் இருந்தார்கள். அதை என்னால் நம்ப முடியவில்லை. பின்னர் சென்னைக்கு விளையாட நாங்கள் சென்றோம். அங்கே 98% அல்ல 100% ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாக இருந்தனர். இந்தியாவில் இப்படி ஒரு வீரரை ஹீரோவாக கொண்டாடுவதை நம்ப முடியவில்லை”

இதையும் படிங்க: இந்த 2 முன்னாள் இந்திய வீரர்களில் ஒருவர்தான் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் – ஜெய் ஷா கொடுத்த ஹின்ட்

“இந்தியாவில் இதற்கு முன் விளையாடிய போது சச்சின் டெண்டுல்கரை அவ்வாறு பார்த்துள்ளேன். பின்னர் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளராக இருந்த போது விராட் கோலி, தோனி கொண்டாடப்பட்டனர். ஆனால் இங்கே அதை விட அதிகமாக கொண்டாடுகின்றனர்” என்று கூறினார். அதே சமயம் இப்படி ஒருவரை கொண்டாடுவது மற்ற வீரர்கள் மனதை புண்படுத்துவதாகவும் லாங்கர் தெரிவித்தார். எடுத்துக்காட்டாக இந்தியாவின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா நீக்கப்பட்டதற்காக மும்பை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது சரியல்ல என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement