இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2020ஆம் ஆண்டு பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த மாதம் 19ம் தேதி இன்று துவங்கியது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் சென்னை அணியம் கலந்துகொண்டது. இந்த ஏலத்தில் சென்னை சி.எஸ்.கே அணி முதல் வீரராக இங்கிலாந்து வீரரான சாம் கரணை 5.50 கோடிக்கு வாங்கியது. அதன்பின்னர் இரண்டாவது வீரராக பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கு வாங்கியது.
இறுதியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹேசல்வுட்டை 2 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. அவர் டி20 போட்டிகளில் அதிக அளவு விளையாடியதில்லை. டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசும் அவர் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் கூட ஆடுவது கிடையாது. இந்நிலையில் அவரை தேர்வு செய்தது தவறான தேர்வு தான் என்றே கூறலாம்.
Jostling into the #AnbuDen is Big Josh from Oz, who’s already used to wearing the #yellove! #SuperFam #SuperAuction #WhistlePodu 🦁💛 pic.twitter.com/wqaJJEbMpP
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2019
ஏனெனில் சென்னை அணியின் துவக்க வீரரான ஷேன் வாட்சனுடன் இறங்க வெளிநாட்டு துவக்க வீரரை வாங்கி இருக்கலாம். வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரரான எவின் லீவிஸ் 1 கோடி அடிப்படை விலையாக இருந்தது அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இந்திய அணிக்கு எதிராக அதிரடி சதம் அடித்த லீவிசை வாங்கி இருந்தால் அது சரியான தேர்வாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.