ரோஹித்தின் வழி தான் கரெக்ட்.. அதை வெச்சே இந்தியாவை வீழ்த்துவோம்.. பட்லர் பாராட்டுடன் நம்பிக்கை

Jos Buttler
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது.

சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் விமர்சனங்களை சந்தித்த ரோகித் சர்மா இந்தத் தொடரில் இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வர வேண்டிய நிலையில் உள்ளார். அதற்கு 2023 உலகக் கோப்பையில் சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்கிய அணுகுமுறையை அவர் பின்பற்றுவார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ரோஹித் சர்மாவின் வழி:

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு ரோகித் சர்மாவின் அதிரடியான அணுகுமுறை மிகவும் சரியானது என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பாராட்டியுள்ளார். மேலும் அந்த அணுகுமுறையை தாங்களும் பின்பற்றி இத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு முன் பட்லர் பேசியது பின்வருமாறு.

“கடந்த உலகக் கோப்பையை திரும்பிப் பார்க்கும் போது கிரிக்கெட்டின் அதிரடியான பிராண்டை நேர்மறையாக விளையாடிய 2 அணிகள் தான் ஃபைனலில் விளையாடின. டிராவிஸ் ஹெட் ஃபைனலில் பேட்டிங் செய்த விதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே அவர்களுக்கு வெற்றியும் கிடைத்ததை உங்களால் பார்க்க முடிந்தது”

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:

“அதே போல ஃபைனலில் பேட்டிங் செய்ய வந்த ரோஹித் சர்மா கேப்டனாக அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு தள்ளியதற்காக பாராட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு அவர் இந்திய அணியை எடுத்து வந்துள்ளார். எனவே நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம். அதற்கு எதிரணியை பேட்டிங்கில் அழுத்தத்தின் கீழ் தள்ளுவதற்கான வழியை நாங்கள் கண்டறிய வேண்டும்”

இதையும் படிங்க: தமிழக வீரர் வருணுக்கு இங்கிலாந்து, 2025 சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பு கிடைக்குமா? கேப்டன் ரோஹித் பதில்

“அதே போல விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். எதிரணி வீரர்கள் அதிக நேரம் பேட்டிங் செய்தால் அவர்கள் உங்களுக்கு வலியை ஏற்படுத்துவார்கள். எனவே நாங்கள் விக்கெட்டுகளை எடுப்பதற்கான வழியை கண்டறிய முயற்சிப்போம். இவை அனைத்தும் திட்டங்களை செயல்படுத்துவதைப் பற்றியதாகும். அதை செயல்படுத்தி நன்றாக விளையாடினால் நல்ல முடிவுகள் கிடைக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து முதல் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement