கிரிக்கெட்டில் தனது முன்னோடியாக கருதும் ஹீரோ தோனியிடம் இருந்து பட்லர் பெற்ற பரிசு – வைரலாகும் புகைப்படம்

Buttler-3
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

CSKvsRR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்களும், தோனி 28 ரன்கள் அடித்து இருந்தனர். அடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 அவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவரே தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பிளேஆப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது என்றே கூறலாம்.

buttler

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் ஐபிஎல் ஜெர்சியை பட்லர் பரிசாக பெற்றதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தை சிஎஸ்கே அணியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. நேற்று தோனி தனது 200-வது ஐபிஎல் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிரிக்கெட்டில் கீப்பராக, பினிஷராக தான் முன்னோடியாக கருதும் தோனியிடம் இருந்து அவரது ஐபிஎல் ஜெர்ஸியை நினைவு பரிசாக பெற்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்காக விளையாடும் போது கூட தனக்கு பிடித்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மற்றும் ரோல் மாடல் என அனைத்துமே தோனி தான் என்று பட்லர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement